Thursday, July 9, 2009

புத்தாண்டே வருக!



கவிஞர்  நா.இராசசெல்வம்,
புதுச்சேரி,
  இந்தியா.

வன்முறை தன்னை விட்டு
வாழ்வினில் அமைதி காண
நன்மையே பூத்து, நாடு
நலமுடன் ஓங்கி வாழ,
இன்பமே விளைந்து, மக்கள்
இனிமையாய் வாழ்வ தற்கே
அன்புடன் அழைப்போம் புதிய
ஆண்டினை வருக வென்றே!!